Tamilவிளையாட்டு

ரோகித் சர்மா, விராத் கோலியை மிஞ்சிய மிதாலிராஜ்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை மிதாலிராஜ், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான், அயர்லாந்துக்கு எதிராக அரைசதம் விளாசி அசத்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவர் இதுவரை 80 இன்னிங்சில் பேட்டிங் செய்து 17 அரைசதங்களுடன் 2,283 ரன்கள் குவித்து இருக்கிறார். ஆண்களை விட அவர் அதிக ரன்கள் சேர்த்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களில் அதிகபட்சமாக நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 2,207 ரன்களும், விராட் கோலி 2,102 ரன்களும் எடுத்துள்ளனர். இவர்களை மிதாலிராஜ் தற்போது மிஞ்சினாலும், வீராங்கனைகளின் பட்டியலில் அவர் 4-வது இடம் வகிக்கிறார். நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் 2,996 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

35 வயதான மிதாலிராஜ் கூறுகையில், ‘கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அணி நிறைய முன்னேற்றம் கண்டு இருக்கிறது. அணிக்கு வருகை தந்துள்ள இளம் வீராங்கனைகள் 20 ஓவர் போட்டிக்கான அணுகுமுறையை மாற்ற விரும்புகிறார்கள். அவர்களுக்காக இந்த உலக கோப்பையை நிச்சயம் வெல்ல விரும்புகிறேன். பீல்டிங் கட்டுப்பாடு உள்ள ‘பவர்-பிளே’க்குள் அதிகமான பவுண்டரிகள் அடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்திய அணிக்காக தொடர்ந்து ரன்கள் குவிப்பேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *