Tamilவிளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் – ஸ்ரீகாந்த் கிதாம்பி காலியிறுதிக்கு முன்னேறினார்

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி தென்கொரியாவின் லீ டாங் கெயுன்-ஐ எதிர்கொண்டார்.

முதல் செட்டை 12-21 என எந்தவித போராட்டமின்றி ஸ்ரீகாந்த் கிதாம்பி இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய ஸ்ரீகாந்த் 2-வது செட்டை 21-16 எனவும், வெற்றிக்கான 3-வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் நம்பர் வீரரான கேன்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற டென்மார்க் ஓபன் அரையிறுதியில் மொமோட்டாவிடம் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *