Tamilசெய்திகள்

அமெரிக்காவில் கொடூரம் – கர்ப்பிணி பெண் வயிற்றை கிழித்து கொலை

அமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியில் உள்ள ஒரு ஆற்றின் அருகே சவான்னா கிரேவின்ட் (22) என்ற பெண்ணின் சடலம் கிடந்தது. அவரது வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த புரூக் கிரவுஸ் என்ற பெண்ணும் அவரது காதலர் வில்லியம் கோயன் ஆகியோரும் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட சவான்னா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தையின் நிலை என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.

ஆனால் இவர்கள் இருவரும் கர்ப்பிணியாக இருந்த சவான்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். தங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக இத்தகைய கொடூர செயலை புரிந்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக வில்லியம் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கிருந்து ஒரு கயிற்றை கைப்பற்றினர். அதை டி.என்.ஏ. சோதனை மேற்கொண்ட போது அதை வைத்து சவான்னாவின் கழுத்தை வில்லியம் நெரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *