Tamilசெய்திகள்

4 தொகுதிகளில் இடைத்தேர்தல் – மே 1 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்

அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகின்ற மே 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

மே 1-ந் தேதி – சூலூர் தொகுதி. மே 5-ந் தேதி – அரவக்குறிச்சி தொகுதி. மே 6-ந் தேதி – திருப்பரங்குன்றம் தொகுதி. மே 7-ந் தேதி – ஓட்டப்பிடாரம் தொகுதி. மே 11-ந் தேதி – திருப்பரங்குன்றம் தொகுதி. மே 12-ந் தேதி – ஓட்டப்பிடாரம் தொகுதி. மே 13-ந் தேதி – அரவக்குறிச்சி தொகுதி. மே 14-ந் தேதி – சூலூர் தொகுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *