Tamilவிளையாட்டு

2வது போட்டியிலும் வெற்றி – அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது

அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இந்த தொடர் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்குரிய தகுதி சுற்றான “சூப்பர் லீக் ” லாக கணக்கிடப்படுகிறது.

கடந்த 30-ந்தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று பகல்-இரவாக சவுத்தாம்ப்டனில் நடந்தது.

முதலில் ஆடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்தது. கேம்பர் அதிகபட்சமாக 68 ரன் எடுத்தார். அவர் கடந்த ஆட்டத்திலும் அரைசதம் அடித்து இருந்தார்.

அடில் ரஷித் 3 விக்கெட்டும், டேவிட் வில்லே, சகீப் மக்மூத் தலா 2 விக்கெட்டும், ஜேம்ஸ் வின்ஸ், ரீஸ் டாப்ளே தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 32.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேர்ஸ்டோவ் 41 பந்தில் 82 ரன் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். டேவிட் வில்லே 47 ரன்னும், சாம் பில்லிங்ஸ் 46 ரன்னும் எடுத்தனர்.

லிட்டில் 3 விக்கெட்டும், கேம்பர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 4-ந்தேதி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *