Tamilசெய்திகள்

புதுச்சேரியில் 27 ஆம் தேதி பந்த்! – முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில், வருகிற 26-ந்தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 27-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடக்கிறது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *