Tamilசினிமா

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா? – அதிர்ச்சியில் கோலிவுட்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் பரவல் அதிகமாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில், இந்த செய்திகள் உண்மையில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாங்கள் இருவரும் நலமாக இருப்பதாக கூறியுள்ள அவர், தான் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், நயன்தாரா, உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட பணிகளை செய்து வருவதாகவும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *