Tamilசெய்திகள்

திருப்பதி மலைப்பாதையில் பைக்கில் செல்ல தடை!

திருப்பதி 2-வது மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பெண்களை சிறுத்தைப்புலி விரட்டி வந்துதாக்கியது. அதில் இருவரும் காயம் அடைந்தனர். மேலும் அந்த வழியாக கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை சிறுத்தைப்புலி விரட்டி தாக்க முயன்றது.

இந்த சம்பவம் தொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பங்கேற்றுப் பேசினார்.

திருப்பதி மலைப் பாதையில் 2 பெண்களை சிறுத்தைப் புலி தாக்கிய சம்பவம் எதிரொலியாக, திருப்பதி மலைப்பாதையில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மட்டுமே மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது.

மாலை 6 மணிக்குமேல் மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் செல்ல அனுமதி கிடையாது. அந்த வாகனங்களுக்குத் தடை விதிக்க உள்ளோம். அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி, அதற்கான உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும். பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *