Tamilசெய்திகள்

குழந்தைகள் விற்பனை வழக்கு – 6 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக, விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நாமக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், லீலா, ரேகா, நந்தகுமார், சாந்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *