Tamilவிளையாட்டு

ஐபிஎல் போட்டியால் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்தது – ஜோஸ் பட்லர் கருத்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோஸ் பட்லர். இவர் ஐ.பி.எல். போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2 ஆண்டாக ஆடி வருகிறார்.

இந்த நிலையில் உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் போட்டியே சிறந்தது என்று பட்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டியால் தான் வளர்ந்துள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் விளையாடியே தீர வேண்டும் என்பதே என் ஆசை. உலகக்கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் .கிரிக்கெட் தான் சிறந்த போட்டியாகும். ஐ.பி.எல். தொடரில் சில சவால்கள் மிகப்பிரமாதமானவை, கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகியோர் ஸ்டெய்ன், பும்ரா, மலிங்காவை எதிர்கொள்வது சுவாரசியம். கோலி, டிவில்லியர்ஸ் சேர்ந்து ஆடுவதைப் பார்ப்பது வித்தியாசமானது.

கெவின் பீட்டர்சன் உண்மையில் நாங்கள் எல்லாம் ஐ.பி.எல். ஆடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர். வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். எவ்வளவு முக்கியம் என்பதை பீட்டர்சன் உணர்ந்திருக்கிறார்.

இவ்வாறு ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *