Tamilசெய்திகள்

உலகின் மிக வயதான மனிதர் மரணம் அடைந்தார்

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார். 123 வயதான அப்பாஸ் இலியிவ், 1896-ம் ஆண்டு ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் பிறந்தவர்.

1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, டிராக்டர் டிரைவரானார். பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.

அத்துடன் மது, புகை போன்ற எந்த போதை பழக்கத்துக்கும் அடிமையாகாத இவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது. அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *