Tamilசெய்திகள்

ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட உபேர், ஓலா தான் காரணம் – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாட்களில் செய்தது மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

இந்த சந்திப்பில் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்தது குறித்து அவர் கூறுகையில், ‘மோட்டார் வாகன உற்பத்தியில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக பெரும்பாலான மக்களின் மனப்போக்கு, ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களை வாங்குவதைவிட ஓலா, ஊபர் போன்றவற்றை பயன்படுத்துவதே சிறந்தது என்றாகிவிட்டது.

மேலும் பி.எஸ்6 இந்த துறையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இதனை மீட்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வேலையிழப்பு பிரச்சினையை சரிசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *