Tamilசெய்திகள்

விருதுநகரில் ரெயில் நிறுத்தம்! – மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சரத்குமார்

விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் முயற்சியால் உருவாக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தை கடந்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இந்த நிலையில், இந்த ஊரில் பயணிகள் சென்று வர வசதியாக ரெயில் நிறுத்தம் வேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ்கோயலை டெல்லியில் நேரில் சந்தித்து சரத்குமார் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘மணிமண்டபத்தை சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும் என்பதால் இப்பகுதியில் ரெயில் நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மந்திரியிடம் கோரிக்கையை வைத்ததாகவும், அவர் பரிசீலனை செய்வதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை தாங்கள் வரவேற்பதாகவும், இதன் பயன்குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *