Tamilசினிமா

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா !

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் டெல்லி காற்று மாசுவால் கவலைப்பட்டு முகத்தில் முகமூடி அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் “காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் எப்படி வாழமுடியும். காற்று சுத்திகரிப்பும் முகமூடியும் நமக்கு தேவையாக இருக்கிறது. வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. “புகைப்பிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி போட்டது சரியான செயல்தான். காற்று மாசு குறித்து இரட்டை வேடம் போட வேண்டாம். காற்று மாசு பற்றி பேசுவதற்கு முன்னால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்” என்றெல்லாம் அவரை விமர்சித்தனர்.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா டுவிட்டர் பக்கத்தில் புதிதாக வெளியிட்டுள்ள ஐஸ்கிரீம் படமும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வரிசையாக அடுக்கி வைத்த 500 ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் ஐஸ்கிரீமை வைத்து பிரியங்கா சோப்ரா சாப்பிடுவதுபோல் அந்த புகைப்படம் உள்ளது.

சாப்பாட்டுக்கு வழி இல்லாத ஏழைகள் வாழும் நாட்டில் 500 ரூபாய்களுக்குள் ஐஸ்கிரீமை வைத்து சாப்பிடுவதா? காந்திஜி புகைப்படம் பதித்த ரூபாய் நோட்டை ஐஸ்கிரீமுக்குள் வைத்து அவமதித்த செயல் கண்டிக்கத்தக்கது என்று கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். இன்னும் சிலர் அது போலியான 500 ரூபாய் நோட்டு என்று பிரியங்காவுக்கு ஆதரவாக பேசுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *