Tamilசெய்திகள்

தனது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்த நாமக்கல் நீதிபதி!

நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-இன் நீதிபதியாக இருப்பவர் வடிவேல். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கு இடமாறுதலாகி வந்தார்.

நாமக்கல்லில் வசித்து வரும் இவர், திருச்செங்கோடு சாலையில் உள்ள வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது மகள் ரீமாசக்தி மற்றும் மகன் நிஷாந்த்சக்தி ஆகியோருடன் வந்தார்.

இதைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் பி. சாந்தியிடம், தனது குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்கை வழங்குமாறு கோரி விண்ணப்பத்தை அளித்தார்.

இதையடுத்து, நீதிபதியின் மகள் ரீமாசக்தியை 8-ம் வகுப்பிலும், மகன் நிஷாந்த்சக்தியை 6-ம் வகுப்பிலும் சேர்க்கும் நடவடிக்கையை தலைமை ஆசிரியை மேற்கொண்டார்.

இதற்கு முன்னர் துறையூரில் வடிவேல் பணியாற்றிய போதும், தனது குழந்தைகளை அரசுப் பள்ளியிலேயே அவர் படிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *