Tamilசெய்திகள்

சொந்தமாக பேச தெரியாவதர் பிரதமர் மோடி – ராகுல் காந்தி தாக்கு

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மேற்கு வங்க மாநிலம் பிரூலியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை கடுமையாக கிண்டல் செய்தார். அவர் பேசியதாவது:-

பா.ஜனதா கட்சியின் முக்கிய நோக்கமே பிரதமர் மோடியை எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான். ஆனால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர எந்த வழியும் இல்லை.

இந்திய மக்கள் மோடிக்கு சரியான பதிலடியையும், பெரிய அதிர்ச்சியையும் கொடுப்பார்கள். இதை அவர் உணர்ந்துள்ளார்.

மோடியிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் இந்திய மக்களிடம் பொய் பேசாதீர்கள். எந்த சக்தியாலும் உங்களை மீண்டும் நாட்டின் பிரதமர் ஆக்க முடியாது.

மோடி பிரசாரம் செய்யும் போது அவர் முன்னால் இருபுறமும் டெலிபிராம்ப்டர் என்று சொல்லக்கூடிய திரை கண்ணாடிகளை பொருத்தி வருகின்றனர். அதில் இருப்பதை பார்த்து தான் மோடி பேசுகிறார். அவருக்கு சொந்தமாக பேசத் தெரியாது.

நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி அவர் பேசுவது கிடையாது. இதனால் மோடி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். விவசாயிகளை பற்றியும் அவர் பேசவில்லை.

நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என அவர் கூறியுள்ளது பற்றியும் அவர் பேசுவதே கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் நலனுக்காக புதிய சட்டம் இயற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *