Tamilசெய்திகள்

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கோரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,882 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர்சென்று வந்த நிலையில் தீணையப்பு நிலைய வீரருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 362 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று மேலும் 27 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 389-ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *