Tamilசினிமா

சிம்புவுடன் இணையும் அனிருத்!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் சிம்பு. இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், மகத், கேத்தரீன் தெரசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜனவரி இறுதி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. அவரது பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி படப்பூஜையுடன் படம் தொடங்கப்படவுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் படம்.

‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிம்பு. இதனை சீமான் அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சமீபகாலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார் சீமான். சிம்பு படத்தின் மூலமாக தற்போது இயக்கத்துக்கு திரும்பியுள்ளார். இந்த படமும் ஒரு அதிரடி அரசியல் கதை தான் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *