Tamilசெய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி! – தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்ததை எடுத்து காட்டுவதாக உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் பயங்கரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியிருப்பது புலனாய்வு களத்தில் மத்திய அரசு பலவீனமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

எனவே மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவை ஏற்படுத்தி பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ள மர்மங்கள் குறித்து ஆராய வேண்டும்.

ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி தலைமையிலான அரசு பதவியை தக்க வைப்பதற்காக போராடி வருகிறது. இதனால் மோடிக்கு கட்டுப்பட்ட அரசாக அச்சத்தில் உறைந்திருக்கிறது.

மத்திய அரசின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு தமிழக அரசு சுதந்திரமாக செயல்படாதது வேதனை தருகிறது.

பாரதிய ஜனதாவுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அ.தி.மு.க -பா.ஜனதா கூட்டணி தி.மு.க.வுக்கு எதிரான வலுவான கூட்டணி அல்ல.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *