Tamilசெய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கல் – தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் டிரகாட் சுகன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் எனவும், தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது எனவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *