Tamilவிளையாட்டு

ஒரு நாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் – டோனியை முந்திய ரோகித் சர்மா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது.

இன்றைய ஆட்டத்தின் ஆரம்பத்தில் ரோகித் சர்மா 216 சிக்சர்கள் அடித்து 2-வது இந்தியராக இருந்தார். டோனி இந்தியாவுக்காக 217 சிக்சர்கள் அடித்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 92 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரியுடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்தார். இதனால் எம்.எஸ்.டோனியை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் டோனி 217 சிக்சர்களுடனும், அடுத்து தெண்டுல்கர் 195 சிக்சர்களுடனும், கங்குலி 189 சிக்சர்களுடனும், யுவராஜ் சிங் 153 சிக்சர்களுடனும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *