Tamilவிளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து – ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் இடையிலான போட்டி டிராவானது

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. ஜாம்ஷெட்புர் எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் 39-வது நிமிடத்தில் ஐதராபாத் அணி முதல் கோலை அடித்தது. இதனால் முதல் பாதியில் 1-0 என ஐதராபாத் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் இறுதியில் 93-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்தது.

இறுதியில், ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *