Tamilசெய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மானுக்காக கவலை தெரிவித்த அமைச்சர் வேலுமணி

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதும் வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் அவர்கள் தடுப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் ரகுமானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொந்தளித்து வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து உள்பட திரையுலக பிரபலங்களும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படும் இந்தி திரையுலகினரை சாடி உள்ளனர்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் திரு. @arrahman தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *