Tamilசினிமா

எஸ்.பி.பி-யின் உடல் நிலை குறித்து எஸ்.பி.பி.சரண் விளக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று நேற்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இவர் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம் அளித்துள்ளார். அதில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை. நலமாகவே இருக்கிறார் என்று எஸ்.பி.பி மகன் சரண் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *