Tamilசினிமா

எனக்கு கிடைத்த வாய்ப்பு என் அப்பாவுக்கு கிடைத்திருக்க வேண்டும் – துருவ் விக்ரம்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஆதித்ய வர்மா. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் துருவ் விக்ரமின் சிறப்பான நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இப்படத்திற்கு மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால், ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது: ” ஆதித்ய வர்மாவிற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பற்றி கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூட படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார்.

எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாக செய்வார். அப்பாவும் இந்தப்படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எபெக்ட் தான் படமே. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் உழைத்த அத்தனை டெக்னிஷியன்களுக்கும் நன்றி. நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார்.

நான் சுமாராக நடித்த காட்சிகளில் தான் நான் இருப்பேன். நான் பிறந்ததில் இருந்தே எனக்கு சினிமான்னா பிடிக்கும். அதைப்போல் எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். இந்த இடத்தில் நான் நிக்கிறது, நான் நடிக்கிறது எல்லாமே என் அப்பா தான். இந்த வெற்றிக்கான அங்கீகாரம் எல்லாமே என் அப்பாவிற்குத் தான் சேரும். இந்த வயதில் எனக்கு கிடைத்த வாய்ப்பு, என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் அவர் வேறலெவல்ல இருந்திருப்பார். தயாரிப்பாளர் முகேஷ் சார் இப்படியொரு வாய்ப்பைத் தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *