Tamilசெய்திகள்

இத்தாலியில் கொரோனா வைரஸால் 109 பேர் பலி!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்து 409 பேருக்கு வைரஸ் பரவுயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு 3 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 95 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 ஆயிரத்து 89 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துவருவதையடுத்து இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15 -ம் தேதி வரை மூட அந்நாட்டு கல்வித்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *