Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், பெடரரை தோற்கடித்த இளம் வீரரான கிரீஸின் சிட்ஸிபஸ்-ஐ எதிர்கொண்டார்.

நடாலின் அதிரடிக்கு சிட்ஸிபஸ்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-2 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-0 எனவும் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் பேட்டிக்கு முன்னேறினார் நடால். இந்த ஆட்டத்தில் நடால் ஒரு கேம்ஸை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடால் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் அல்லது பவுலி ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ள இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *