Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் தரநிலை பெறாத அமெரிக்காவின் பிரான்சிஸ் தியோபோ-வை எதிர்கொண்டார்.

இதில் நடால் 6-3, 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நடால் அரையிறுதியில் சிட்ஸிபஸ்-ஐ எதிர்கொள்கிறார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் 8-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசைச் சேர்ந்த பெட்ரா கிவிட்டோவா, 15-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லேக் பேர்ட்டியை எதிர்கொண்டார். இதில் கிவிட்டோவா 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் டி கொலின்ஸ் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *