Tamilசெய்திகள்

தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் – சசிகலா அறிக்கை

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ரவுடிகளால் நாளுக்கு நாள் தொடர்ந்து அராஜகங்களாலும், அட்டூழியங்களாலும் பொதுமக்கள் தாங்கிக்க முடியாத துயரத்தை சந்தித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வணிகர்கள் இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தி.மு.க. தலைமையிலான அரசு தமிழ்நாட்டை அச்சுறுத்திவரும் கலாச்சாரத்தை உடனே தடுத்து நிறுத்திட உறுதியான, நிரந்தரமான நடவடிக்கை வேண்டும். மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.