தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது

சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. அந்த ரெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயவாடாவில் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னையில் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த நபர் பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விடுதியில் தங்கியிருந்த இளைஞரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இம்ரான் என்பதும், மதுபோதையில் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools