Tamilசினிமா

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘கண்ணாடி’!

சமீபத்தில் வெளியான `மதுரவீரன்’ படத்தை தயாரித்த வி ஸ்டுடியோஸ் அடுத்ததாக அமலாபால் நடிக்கும் `ஆடை’ படத்தை தயாரித்து வருகிறது. அதேநேரத்தில் வி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் `கண்ணாடி’ எனும் படத்தையும் தயாரித்து வருகிறது.

சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆன்யா சிங் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

`திருடன் போலிஸ்’, `உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இந்த படத்திற்க்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி இருக்கிறார். ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் திகில் கலந்த த்ரில்லர் படமாக படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாகவும், மேலும் இது ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக படத்தை உருவாக்கி வருவதாக இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *