திருட்டு போன பிகாசோவின் ஓவியம் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது

உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் உள்ள குன்ஸ்தல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த பிகாசோவின் 7 ஓவியங்கள் , 2012-ம் ஆண்டு திருட்டு போனது. இதையடுத்து தனி குழு அமைக்கப்பட்டு ஓவியங்களை மீட்பதற்கான பணி நடைபெற்றது.

ஓவியங்களை திருடிய வழக்கில் தொடர்புடைய ருமேனியர்கள் கைது செய்யப்பட்டு 2014ம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், திருட்டுபோன ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், திருட்டு போன ஓவியங்களில் ஒரு ஓவியம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ருமேனியாவின் துல்சியா கவுண்டியில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான மீரா பெட்டிகு என்பவர் இதனை கண்டுபிடித்து புசாரெஸ்டில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் மதிப்பு 9 லட்சத்து 5 ஆயிரம் டாலர்கள் ஆகும்.

தற்போது ருமேனிய அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ள அந்த ஓவியம், பிகாசோவின் ஓவியம்தானா? என உறுதிப்படுத்தப்பட்டபிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools