Tamilவிளையாட்டு

புரோ கபடி – உபி யோதாவிடம் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ்

6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்ற தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி. யோதா அணிகள் மோதின.

முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. ஆனால், 37-32 என்ற கணக்கில் உபி யோதா அணி வெற்றி பெற்றது.

முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 4-18 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது. அதன்பின், கேப்டன் அஜய் தாகூர் மற்றும் அதுல் ஆகியோர் புள்ளிகள் பெற்றனர். இறுதியில், 37-32 என்ற கணக்கில் நெருங்கி வந்து தோல்வியை தழுவியது.

இதையடுத்து, உபி யோதா அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *