Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸ், அரியான அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. தற்போது இண்டர் ஜோன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

மும்பையில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 19 – 15 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா அணி முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் அரியானா அணி பொறுப்புடன் விளையாடியது. ஆனாலும், தமிழ் தலைவாஸ் அணியும் சளைக்காமல் புள்ளிகளை எடுத்தது.

இறுதியில், பரபரப்பான கட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 32 – 32 என்ற புள்ளிகள் எடுத்து சமனில் முடிந்தது.

இந்த போட்டியில் விளையாடிய அரியானா அணி வீரர் விகாஸ் கண்டோலா, 100 ரெய்டு பாயிண்ட்டுகள் எடுத்த பட்டியலில் இணைந்தார்.

இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு அணியை 32 – 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி ஒன்பதாவது வெற்றியை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *