பிரித்வி ஷா ஆஸ்திரேலியாவிலும் சிறப்பாக விளையாடுவார் – கங்குலி நம்பிக்கை

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இளம் வீரரான பிரித்வி ஷா இந்த போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து சதம் அடித்தார். இளம் வயதில் சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சச்சின் முதல் இடத்தில் உள்ளார்.

முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்த பிரித்வி ஷா ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், “வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து செஞ்சூரி அடித்தார். பெரிய போட்டி, முதல் ஆட்டம், அவருக்கு தெரிந்த விளையாட்டை எளிதாக ஆடினார். நேர்மறையான, சிறந்த மனோநிலை, திறமையான ஆட்டம் மிகவும் அபாரம். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும், இந்தியாவிற்கான போட்டியிலும் அவரது ஆட்டம் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

பிரித்வி ஷா ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாட முடியும். இன்னும் ஒரு மாதத்தில் பிரித்வி ஷா ஆஸ்திரேலியா செல்ல வேண்டியுள்ளது. அவர் ஒரு சிறந்த பேக்-புட் வீரர் என்பதாபல் அங்கு சிறப்பாக விளையாடுவது உறுதி.” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news