Tamilவிளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன் – காலியிருதியில் சாய்னா நேவால் தோல்வி

கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடர் சியோல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சாய்னா நேவால் ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

5-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் முதல் செட்டை 21-15 என எளிதில் கைப்பற்றினார். சாய்னாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 3-ம் நிலை வீராங்கனையான ஒகுஹாரா 2-வது செட்டை 21-15 எனக் கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் சாய்னா 16-10 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 20-16 என முன்னிலை பெற்றிருந்தார்.

ஒரு புள்ளி எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என சாய்னா இருந்த நிலையில், ஒகுஹாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக 6 புள்ளிகள் பெற்று 22-20 என வெற்றி பெற்றார். கடும் போராட்டத்திற்குப் பிறகு சாய்னா தோல்வியடைந்து வெளியேறினார். சாய்னா இந்த தோல்வியின் மூலம் ஒகுஹாராவிற்கு எதிராக தொடர்ந்து மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *