கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயங்கர தீ விபத்து!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மருந்து பிரிவில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி ஏராளமான பொருட்கள் கருகியதால், புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான போலீசாரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

தீவிபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகாமையில் சிகிச்சைப் பிரிவுகள் எதுவும் இல்லாததால், நோயாளிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அருகில் உள்ள பகுதிக்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools