Tamilவிளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி நார்த் ஈஸ்ட் அணியிடம் தோற்ற சென்னை

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, நார்த் ஈஸ்ட் பைபிள் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரவ்லின் பார்கெஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, தாய் சிங் 15 மற்றும் 32-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்தார்.

நார்த் ஈஸ்ட் அணி சார்பில் பர்த்தலோமியூ 29, 37, 39-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியினர் 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது வெற்றியை உறுதி செய்தனர்.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *