Tamilவிளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி – ஜாம்ஷெட்பூர் நார்த் ஈஸ்ட் அணிகள் இடையிலான போட்டி டிராவானது

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூர் எப்.சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் பர்த்தலோமியூ முதல் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த்ஈஸ்ட் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜாம்ஷெட்பூர் அணியை சேர்ந்த பருக் சவுத்ரி 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். அதன்பின்னர், ஆட்டத்தின் இறுதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1 -1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *