இன்று காலை 9 மணியளவில் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்த கஜா புயல்!

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த “கஜா புயல்” ஆடிய கோரத் தாண்டவத்துக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். சில மாவட்டங்களில் மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் அதிராம்பட்டினத்தில் “கஜா புயல்” முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது நிலப்பரப்பை நோக்கி புயலின் தாக்கம் நகர்ந்து வருவதால் சில மாவட்டங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினத்தில் 16 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

சில மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools