Tamilசினிமா

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலகினர் நிதி உதவி

கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவும் வகையில் ரூ.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவிருப்பதாகவும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இதுதவிர நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கும், ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் வாங்கவும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதேபோல் நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கருணாகரன் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *