விஜய் ஹசாரே போட்டியில் டோனி விளையாடாதது ஏன்? – பயிற்சியாளர் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து மற்றும் ஆசிய கோப்பையில் டோனியின் ஆட்டம் மோசமாக இருந்தது. இதனால் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

ஆனாலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டோனி இடம் பெற்றுள்ளார். உள்ளூரில் நடைபெறும் விஜய் ஹசாரே போட்டியின் நாக்அவுட் சுற்றில் அவர் ஆடுவார் என்று கூறப்பட்டது. தற்போது டோனி விளையாடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

விஜய் ஹசாரே போட்டியில் அவர் ஆடவில்லை. இதுகுறித்து ஜார்க்கண்ட் அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார் கூறியதாவது:

ஜார்க்கண்ட் அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த நேரத்தில் அணிக்குள் நுழைந்து சீர்குலைவு ஏற்படுத்த டோனி விரும்பவில்லை. அணி நல்ல நிலையில் இருப்பதால் அது அப்படியே நீடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதனால் டோனி விஜய் ஹசாரே போட்டியில் ஆடவில்லை. அவர் ஆடுவதும், ஆடாமல் இருப்பதும் அவரது முடிவே.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools