Tamilவிளையாட்டு

வங்காளதேச பிரீமியர் லீக் – டி வில்லியர்ஸ் பங்கேற்பு

தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேவேளையில் டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று அறிவித்தார்.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால் லீக் போட்டிகளில் விளையாடும் வகையில் அவருக்கு நேரம் கிடைத்தது. இதனால் முதன்முறையாக பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் வங்காள தேச பிரீமியர் லீக் தொடரிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரங்பூர் ரைடர்ஸ் அணி ஏபி டி வில்லியர்ஸ்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அணியில் ஏற்கனவே கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை விளாசும் திறமை படைத்தவர் என்பதால் 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *