5 மாதங்களாக வீட்டுக்குள்ளேயே இருக்கும் மம்முட்டி

மலையாளத்தில் உச்ச நடிகராக இருப்பவர் மம்முட்டி. இவருக்கு தமிழிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய மகன் நடிகர் துல்கர் சல்மானும் தமிழ், மலையாள மொழிகளில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் துல்கர் சல்மான், மாணவர்களுடன் சமீபத்தில் பேசிய உரையாடலில், தனது அப்பா மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றும், அவர் வெளியே செல்லாமல் எவ்வளவு நாட்கள் தன்னால் இருக்க முடியும் என்பதை பார்க்க விரும்புவதாகவும், தனக்கு தானே சவால் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தந்தையை வெளியே ஒரு டிரைவுக்காக செல்ல அழைத்த போது அவர் ஆர்வம் காட்டவில்லை. அவரைப் போல் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை என்றும், சலிப்பாக இருப்பதாகவும், வெளியே செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் துல்கர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools