Tamilவிளையாட்டு

3 ஓவர்கள் வீசி ரன்கள் கொடுக்காமல் 3 விக்கெட் எடுத்த பாகிஸ்தான் வீராங்கனை

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியினர் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி, மழையால் ஒரு பந்துகூட வீச முடியாமல் ரத்தானது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. மழையால் ஈரப்பதமான மைதானத்தில் போட்டிகள் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற வங்காளதேசம் மகளிர் அணியினர் பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதன்படி பாகிஸ்தான் மகளிர் அணியினர் களமிறங்கினர். பாகிஸ்தான் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதையடுத்து, 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணியினர் இறங்கினர். ஆனால் பாகிஸ்தான் மகளிர் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி வங்காளதேசம் சின்னாபின்னமானது. இதனால் வங்காளதேசம் அணி 30 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.

பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் பந்து வீசிய அனாம் அமின், 3 ஓவர் வீசி ரன் எதுவும் கொடுக்காமல் மூன்று விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

மூன்று ஓவர்கள் வீசி ரன் எதுவும் கொடுக்காமல் 3 விக்கெட் வீழ்த்திய அனாம் அமின் ஆட்ட நாயகனக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *