Tamilசெய்திகள்

25ஆம் தேதி முதல் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்

சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தே.மு.தி.க. தேர்தலை சந்திக்கிறது.

இந்த தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவர் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதியில் அவரது மனைவியும் தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் விஜயகாந்த், அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து விஜயகாந்த் நாளை மறுநாள் திருத்தணியில் பிரசாரத்தை தொடங்குகிறார். அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. திருத்தணி தொகுதியில் போட்டியிடுகிறது.

அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து வருகிற 25-ந்தேதி மாலை 6 மணிக்கு பொதட்டூர்பேட்டையில் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.

விஜயகாந்தின் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்கள் இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.