Tamilசெய்திகள்

2020ஆம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டின் விடுமுறை அறிவிப்பு!

சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட் மதுரை கிளைக்கு வருகிற 2020-ம் ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஜனவரி 1-ந் தேதியும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும், தெலுங்கு புத்தாண்டுக்காக மார்ச் 25-ந் தேதியும், மகாவீர் ஜெயந்திக்காக ஏப்ரல் 6-ந் தேதியும், புனித வெள்ளிக்காக ஏப்ரல் 10-ந் தேதியும் விடுமுறை விடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ந் தேதி விடுமுறை விடப்படுகிறது. இதற்காக முதல் நாளான ஏப்ரல் 13-ந் தேதி திங்கட்கிழமையும் ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ந் தேதியும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மே 25-ந் தேதியும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்டு 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமையும்) அதற்கு முதல் நாள் ஆகஸ்டு 10-ந் தேதி திங்கட்கிழமையும் ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது.

காந்திஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதியும், விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 26 மற்றும் 27-ந் தேதிகளிலும், மிலாது நபியை முன்னிட்டு அக்டோபர் 30-ந் தேதியும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 மற்றும் 25-ந் தேதியும் விடுமுறை விடப்படுகிறது.

இதுதவிர குடியரசு தினம், பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், ஆயுதபூஜை, தீபாவளி ஆகியவைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. மேலும் கோடை விடுமுறை மே 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், தசரா பண்டிகை விடுமுறை அக்டோபர் 17-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையிலும், கிறிஸ்துமஸ் விடுமுறை டிசம்பர் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும் விடுமுறை விடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *