Tamilசெய்திகள்

20 ஆம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கும் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

மனுதாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாளாகும். 27-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

29-ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மோதும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யார்-யார்? என்ற முழு விவரம் தெரிந்து விடும்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய 4 கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப்போட்டி உருவாகியுள்ளது. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டு அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் அடைந்துள்ளனர்.

வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருப்பவர்கள், தங்களது மனுதாக்கலை இந்த வாரமே முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். 21-ந்தேதி பங்குனி உத்திரம் சிறந்த தினமாக இருப்பதால் அன்று நிறைய பேர் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

மனுத்தாக்கலை முடித்து விட்டு பிரசாரம் செய்ய சுமார் 20 நாட்களே இருப்பதால் இப்போதே அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாகியுள்ளன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மற்ற தலைவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் ஆளாக சூறாவளி பிரசாரத்தை தொடங்க உள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடும் மு.க.ஸ்டாலின் உடனடியாக நாளை மறுநாளே (20-ந்தேதி) பிரசாரத்தை தொடங்குகிறார்.

மு.க.ஸ்டாலின் இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தை நடத்த உள்ளார். முதல் கட்ட பிரசாரத்தை திருவாரூரில் 20-ந்தேதி தொடங்கும் அவர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவு செய்கிறார். ஒருநாள் கூட இடைவெளியின்றி அவர் 18 நாட்கள் தீவிர பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 18 நாட்களில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 28 பாராளுமன்றத் தொகுதிகளில் ஓட்டு வேட்டையாடுகிறார். அவரது முதல் கட்ட சுற்றுப்பயண விபரம் வருமாறு:-

காலை 10 மணி- நாகை பாராளுமன்ற தொகுதி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி- தஞ்சை பாராளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதி மற்றும் தஞ்சை திலகர் திடலில் பிரசார பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி- பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி, தாத்தையங்கார்பேட்டை ரோடு, முசிறியில் பொதுக்கூட்டம்.

காலை 10 மணி- சேலம் பாராளுமன்ற தொகுதி, சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி – தருமபுரி பாராளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் பிரச்சார பொதுக்கூட்டம்.

காலை 10 மணி – தர்மபுரி பாராளுமன்ற தொகுதி, அரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அரூர் அண்ணா சிலை அருகில் பிரசார பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி- திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் பிரசார பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி – வட சென்னை பாராளுமன்ற தொகுதி, பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதி, இடம்: பெரம்பூர்.

காலை 10 மணி- காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி, திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி, இடம்- திருக்குழுக்குன்றம்.

மாலை 5 மணி – திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி, பூந்தமல்லி சட்ட மன்ற தொகுதி, இடம்-ஆவடி.

மாலை 5 மணி – திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி, நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி.

காலை 10 மணி- தேனி பாராளுமன்ற தொகுதி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி.

மாலை 5 மணி – தேனி பாராளுமன்ற தொகுதி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி.

காலை 10 மணி – மதுரை பாராளுமன்ற தொகுதி, மாலை 5 மணி – விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி.

காலை 10 மணி – சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதி.

மாலை 5 மணி- ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி.

மாலை 5 மணி- கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி, ஓசூர் சட்டமன்ற தொகுதி.

காலை 10 மணி – வேலூர் பாராளுமன்ற தொகுதி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதி.

மாலை 5 மணி- வேலூர் பாராளுமன்ற தொகுதி, குடியாத்தம் சட்டமன்ற தொகுதி.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை 10 மணி – அரக்கோணம் பாராளுமன்ற தெகுதி, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி.

மாலை 5 மணி- தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.

மாலை 4 மணி- நீலகிரி பாராளுமன்ற தொகுதி.

காலை 10 மணி – திருப்பூர் பாராளுமன்ற தொகுதி.

மாலை 5 மணி – கோவை பாராளுமன்ற தொகுதி.

காலை 10 மணி – பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி.

மாலை 5 மணி – ஈரோடு பாராளுமன்ற தொகுதி.

காலை 10 மணி – கரூர் பாராளுமன்ற தொகுதி.

மாலை 5 மணி – கள்ளக் குறிச்சி பாராளுமன்ற தொகுதி.

காலை 10 மணி – விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி.

மாலை 5 மணி – ஆரணி பாராளுமன்றத் தொகுதி.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயண அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் 2-வது கட்ட பிரசாரத்தை 7-ந்தேதியே தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் 16-ந்தேதி நிறைவுபெறுகிறது. எனவே மு.க.ஸ்டாலினின் 2-வது கட்ட பிரசாரத்துக்கு 7-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 10 நாட்களே அவகாசம் உள் ளது.

இந்த 10 நாட்களில் மீத முள்ள பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளில் ஆதரவு திரட்ட மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *