Tamilசெய்திகள்

15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபத்தி பாலியல் கொடுமை – 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், அந்த சிறுமியை சங்கிலி தொடர்போல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தாக்கியது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கடந்த 15ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது, 7 பெண்கள், காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிறுமியின் உறவினர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், பாஜக பிரமுகர் உள்ளிட்ட13 பேருக்கு 20 ஆணடு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.