Tamilசினிமா

வெள்ளை புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்கா இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் அதிக அளவு விலங்கு மற்றும் விலங்கு வகைகளை கொண்ட பூங்காவாக திகழ்கிறது. இப்பூங்காவில் பார்வையாளராக வந்து விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக “விலங்கு தத்தெடுப்பு” திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளலாம். நேற்று தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்னும் வெள்ளை புலியை மேலும் 4 மாதங்களுக்கு மே 2020 முதல் தத்தெடுத்து உள்ளார். இவர் ஏற்கனவே 2018-ம் ஆண்டு முதல் இந்த புலியை தத்தெடுத்துள்ளார். இந்த புலி வண்டலூர் பூங்காவில் உள்ள 14 வெள்ளைப்புலிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *